districts

img

செந்தொண்டர் மாநில பயிற்சிமுகாம் நிறைவு

மயிலாடுதுறை, ஆக.18 - மயிலாடுதுறையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செந்தொண்டர் மாநில பயிற்சி முகாம் சனி மற்றும் ஞாயிறு ஆகிய தினங்களில் நடைபெற்றது. 

கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.பாலா தலைமையில் கேணிக்கரை கிங் பேலஸ் மண்டபத்தில் ஞாயிறன்று நடைபெற்ற இரண்டாவது நாள் முகாமில், ‘அவசர கால முதலுதவி’ குறித்து சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவரும், பேராசிரியருமான சு.பத்மராஜன் பயிற்சி உரையாற்றினார்.

முன்னதாக அணிவகுப்பின் நுணுக்கங்கள் குறித்து செந்தொண்டர்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டது. மாநில செயற்குழு உறுப்பினர் செ.முத்துக்கண்ணன் பயிற்சி முகாமை நிறைவு செய்து உரையாற்றினார். மயிலாடுதுறை மாவட்டச் செயலாளர் பி.சீனிவாசன், மாநில கன்வீனர் ஜி.ஸ்டாலின், மாவட்ட கன்வீனர்கள், பொறுப்பாளர்கள், கேப்டன், துணை கேப்டன், பயிற்சியாளர்கள் மற்றும் செந்தொண்டர்கள் கலந்து கொண்டனர்.